வெள்ளி, 4 ஏப்ரல், 2014

கணிப்பொறி - கணிப்பொறியின் வரலாறு

கணிப்பொறி – COMPUTER

Commonly Operating Machine Particularly Used for Trade Education and Research.

கணிப்பொறியின் வரலாறு 


சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், மனிதன் வியாபாரத்தில் ஈடுபட்ட போது பெருவாரியான வரவு செலவு கணக்குகளை கணக்கீடு செய்வதற்கு சிரமப்பட்டதால் ஒரு இயந்திர கணிப்பொறியின் தேவையை உணர்ந்தான். எனவே, அக்காலக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அபேகஸ் (Abacus) என்னும் சாதனம் அன்றைய மனிதனுக்கு  பேருதவியாக இருந்தது. இக்கருவி மணிச்சட்டம் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு செவ்வக சட்டத்தில் வரிசையாக பொருத்தப்பட்ட கம்பிகளில் மணிகள் கோர்க்கப்பட்ட அமைப்பை கொண்டிருந்தது. இக்கருவிதான் 1600 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தது.

முதல் எந்திர கணிப்பான் கி.பி.1623-ல்  வில்ஹெல்ம் சிக்ஹார்டு (Wilhem Schickard) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது கூட்டல், கழித்தல் கணக்குகளை ஆட்டோமேட்டிக்காக கால்குலேட் செய்ய வல்லதாக இருந்தது. மேலும், இது பெருக்கல், வகுத்தல் கணக்குகளை ஓரளவிற்கு கால்குலேட் செய்வதற்கு உதவி புரிந்தது. பின்னர், அதே ஆண்டில் பிளெய்ஸி பாஸ்கல் (Blaise Pascal) என்னும் அறிவியல் அறிஞர் இதே கருவியை புதுவகையில் வடிவமைத்து அறிமுகப்படுத்தினார்.

இதனையடுத்து, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கணிப்பீடு கருவிகளின் குறைபாடுகளை நீக்கி கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்கீடுகளை ஆட்டோமேட்டிக்காக கால்குலேட் செய்ய லெபனீஸ் உருளை (Leibniz wheel) என்னும் கருவி 1946 காட்ஃரீடு வில்ஹெல்ம் லெபனீஸ் (Gottried Whilhelm Leibniz) என்ற சயின்டிஸ்ட் கண்டுபிடித்தார்.

கணக்கீட்டுத்துறையின் திருப்பு முனையாக அமைந்த கால கட்டம் 19-ஆம் நூற்றாண்டாகும். 1791 முதல் 1871 வரை வாழ்ந்த கனித மேதை சார்லஸ் பேப்பேஜ் (Charless Babbage) என்பவர் 1833-ல் (Different Engine, Analytical Engine) என்ற இரு கணக்கீட்டு தத்துவங்களை வடிவமைத்தார். இத்தத்துவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கருவியானது நிராவித்திறனால் இயக்கப்பட்டது. 20-ஆம் நூற்றான்டில் (1940-1945) மின்னனுத்திறனின் வருகைக்குப் பிறகு பேப்பேஜின் மேற்கண்ட தத்துவதுவங்களின் அடிப்படையில் மின்னனுக் கணிப்பொறிகள் அமைக்கப்பட்டன. எனவே, பேப்பேஜ் அவர்கள் கம்ப்யூட்டர்களின் தந்தை (Father of Computers) என்றழைக்கப்படுகிறார்.



வியாழன், 30 மே, 2013

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் - மேலோட்டப் பார்வை

கணினி முதலில் ஒரு பெரிய அரையில் வைக்கும் அலவுக்கு உருவாக்கப்பட்டு பிறகு காலப்போக்கில் அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக நமது கைக்குள் அடங்கும் அலவுக்கு தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. பழைய காலத்து கணினிகள் தோற்றத்தில் பெரியதாக இருந்தாலும் அதன் செயல் திறன் மற்றும் நினைவாற்றலில் மிக மோசமாகவே இருந்தது. எனவே சாதறன மனிதனால் அதனை இயக்கமுடியாது. அதற்கு வள்ளுனர்கள் தேவைப்பட்டார்கள் ஏன்என்றால் அந்த பழைய கணினிகளிள் மென்பொருளின் ஆதிக்கம் பிரித்தியோகமாக இல்லை. மென்பொருள் வசதி குறைவாகவும் மென்பொருளை ஏற்றுக்கொள்ளாத எந்த கணினியும் சிறந்த கணினியாக இருக்கமுடியாது.

தற்காலத்து கணினிகள் சிரியதாகவும், அதிக நினைவாற்றல் கொண்டதாகவும் உள்ளதால், ஏறாளமான மென்பொருள்களை கையாலும் தன்மையுடைதாக உள்ளன. எனவே பயனர்களுக்காக உருவாகப்பட்ட மென்பொருள் கட்டமைப்புகளை கணினியில் நிருவி,  பலத்துறைகளிள் அதன் பயன்களை அனுபவித்து வருகின்றனர். கணினி மென்பொருள்கள் சிரிய தானியங்கி கார்களில் இருந்து, வாகனங்களை கட்டுபடுத்தும் Traffic light controller, மின்சாரத்தை சேமிக்கும் inverters units, தொலைக்காட்சியின் setup box, மற்றும் தகவல் பறிமாற்றத்தை எளிது படுத்தும் கைபேசி என... எல்லா வற்றிலும் மென்பொருளின் ஆதிக்கம்  உள்ளதால் மனிதனின் செயலிலும் மாற்றங்கள் பல கண்டுவிட்டான். மென்பொருளின் உதவியால் வங்கிகணக்குகளையும் மற்றும் பண பறிவர்தனைகளையும் ஒரே ஒரு கணினியின் உதவியால் ஒரு கோடிக்கு மேற்பட்டவர்களின் அன்றாட நடவடிக்கைகளை ஒரே ஒரு மனிதரால் கையாலும் நிலைக்கு கணினி மற்றும் அது சார்ந்த தகவல் தொழில் நுட்பம் முன்னேறியுள்ளது. 

தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்ப்பட்ட அபரிவிதமான அறிவியல் வளர்ச்சி... பல பிரிவுகலாக உள்ள இந்த உலகத்தை மற்றும் அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் எல்லோரும் அறிந்துக்கொள்ளும் வகையிலும், எல்லோரும் அதனை மாற்றி அமைக்கும் வகையிலும் இணையத்தின் வாயிலாக எளிதாக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்புச் சாதனங்களால் ஒரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூட உடனுக்குடன் மற்றோரிடத்தில் அறியமுடிகிறது. இவற்றில் கணினியின் பங்கு அளப்பரியது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுப்பிடிப்பான கணினி, சில நொடிகளில் மில்லியன் கணக்குகளைச் செய்துகாட்டும். இதை முறையாக இயக்கினால் மனித மூளையைப்போன்று நுண்ணறிவுத் திறனோடு வேலைச்செய்யும். கணினி இன்று எல்லாத் துறையகளிலும் பயன்படுகிறது.


கணினி என்பதன் பொருள்

கணினி (computer) என்பது கட்டளைத் தொகுதிகள் (instruction sets) அல்லது நிரல்களின் (programs) மூலம் சில பணிகளை அல்லது கணக்குகளைச் செய்யும் இயந்திரம். முதன்முதலில் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட முழுமையான எலக்ட்ரானிக் கணினிகளில் பிரம்மாண்டமாக இருந்தன; அவற்றில் பலர் இணைந்து பணிபுரிய வேண்டியிருந்தது. அந்தத் தொடக்க காலத்துக் கணினிகளுடன் ஒப்பிடும்போது இன்றைய கணினிகள் பிரமிப்பூட்டுகின்றன. அவை பழைய கணினிகளை விட பல்லாயிரம் மடங்கு வேகமாக இயங்குவது மட்டுமல்ல, அவற்றை உங்கள் மேஜை மேல், மடி மேல், அல்லது சட்டைப் பைக்குள் கூட வைக்கலாம்.

பொதுவாக கணினி  இயந்திரம் - வன்பொருள்  (hardware) மற்றும் மென்பொருள் (software) இடையிலான பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது. வன்பொருள் (hardware) என்பது கணினியில் நீங்கள் பார்க்கவும் தொடவும் முடியும் பாகங்களைக் குறிக்கிறது; இதில் கணினிப் பெட்டியும் அதில் உள்ள அனைத்தும் அடங்கும். வன்பொருட்களில் மிக முக்கியமானது உங்கள் கணினியில் உள்ள மையச் செயலகம் (CPU) அல்லது நுண்செயலி (microprocessor) என்று அழைக்கப்படும் மிகச் சிறிய ஒரு செவ்வக வடிவச் சில்லு(tiny rectangular chip). இதுதான் உங்கள் கணினியின் மூளை (brain) போல — கட்டளைகளைப் புரிந்துகொண்டு கணக்கிடுவது இந்தப் பகுதிதான். மேலும் விவரங்களுக்கு கணினி செயல்படும் தத்துவம், கணினி இயக்கமுறைமை என்ற பக்கங்களை பார்க்கவும்.

கணினியின் வரலாறு

1946இல் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்ற கணினிதான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி (first general-purpose electronic computer). அது அமெரிக்க ராணுவம் பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்டது. ENIAC பிரம்மாண்டமான ஒரு கணினி. அதன் எடை 27,000 கிலோகிராமுக்கு (60,000 பவுண்டுகளுக்கு) மேல் இருந்தது; அது ஒரு பெரிய அறையையே நிரப்பக்கூடியதாக இருந்தது. தரவைச் செயலாக்க (To process data), ENIAC சுமார் 18,000 வெற்றிடக் குழாய்களைப் (vacuum tubes) பயன்படுத்தியது. இதில் ஒவ்வொரு குழாயும் ஒரு சிறிய பல்பின் அளவு இருக்கும். அந்தக் குழாய்கள் எளிதில் தீர்ந்துபோனதால் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது.

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும்

கணக்கிடுவதற்காக முதலில் எளிதான மணிச்சட்டம் உருவாக்கப்பட்டது. கணினி உருவாக இதுவே முதல் படிவமாக அமைந்தது. பாரிசு நகரை சார்ந்த பிளேஸ் பாஸ்கல் என்னும் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார். கி.பி. 1833 இல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் கணினியை முதலில் வடிவமைத்தார். ஆங்கிலக் கவிஞர் பைரனின்  மகள் லேடி லவ்லேஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால், முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்பட்டார்.



மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, ஹார்வார்டு பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் ஹோவார்டு ஜாக்கன் என்பவரை ஐ.பி.எம். பொறியாளர் துணையுடன் எண்ணிலக்கக் கணினியைக் கண்டறித் தூண்டியது. இதற்கு ஹார்வார்டு மார்க்-1 எனப் பெயரிட்டனர். தற்போது அமெரிக்காவும் ஜப்பானும் மீத்திறன் கணினியை உருவாக்கப் போட்டியிடுகின்றன.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகக் கணினியிலும் புதுமையான அமைப்புகள் தோன்றியவண்ணம் உள்ளன. இன்றைய நிலையில், பல்லூடக வசதிகொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி முதலிய கணினிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. கணினியைப் பயன்படுத்துவோரின் தேவை அதிகரிக்க அதிகரிக்க கணினியின் வளர்ச்சியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன் இணையத்தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் பெறமுடிகிறது.

இணையம்:  இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல் என்னும் அமெரிக்கராவர். உலகெங்கும் உள்ள கணினிச் செயதிகளை இணைக்க, இணையம் பயன்படுகின்றது. இலக்கியம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், கணிதம், திரைப்படம் என எண்ணற்ற துறைகள் பற்றி இணையத்தின் வாயிலாகச் செய்திகளை அறிய முடிகிறது.

கணினியுடன் இணையத்தள இணைப்பானது படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960 ஆம் ஆண்டில், ஒரு கணினியிலிருந்து மற்றொரு கண்னிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். இது மிகுந்த காலச் செலவை ஏற்படுத்தியது. இதற்காக மாற்றாக, ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர்நெட் அட்டை என்னும் சிறுபலகையைப் பொருத்திப பயன்படுத்தினர். இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வட்டாரத்துக்குள் உள்ள கணினிகளை இணைத்தனர். இஃது அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்டது. இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது. முழுமையான இணைப்பைப்பெறச் செயற்கைக்கோள்வழி இணைப்பினைப் பயன்படுத்திப் புவியைச் சுற்றி, நாடுகளின்மீது வலம்வரும் விண்வெளிக்கலண்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமைக்கான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.

சுவிச்சர்லாந்து நாட்டைச் சார்ந்த பிம்பெர்னர் லீ என்னும் இயற்பியல் வல்லுநர், 1989 ஆம் ஆண்டு இணையதளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல் எனப்பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் ஆழைக்கலாம். இவ்வலையமைப்பு, பலசெய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.


தொலைத்தொடர்புத் துறையில் ஈராயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை விடக் கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பல நூறு மடங்காகும். இன்று ஒருவரை நேரடியாகப் பார்க்காமலே மின்னனுத்தகவல் வாயிலாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. வீட்டிலிருந்தபடியே உலகத்தைப் பார்க்க, பழக, மகிழ வாய்ப்பைப் பெறவும் இணையம் உதவுகிறது. கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்லவேண்டும். எனினும் கணினி வல்லுநர் பில்கேட்ஸின் கூற்று, இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.

கணினியின் பயன்பாடுமிக்குள்ள இந்தக்  காலத்தில், தொழில்நுட்ப உத்திகள் அனைத்தையும் பயன்படுத்திக் கணினிவழியாகத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் பெறமுடிகிறது. இந்நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான கணினி, அறிவை விரிவு செய்வதற்கும் உலகத் தொடர்பிற்கும் சிறந்த வாயிலாகத் திகழ்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் புதுமைகளான கணினியும் இணையத்தளமும் தொலைத்தொடர்புக் கருவிகளும் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டு வந்துள்ளன.



திங்கள், 6 மே, 2013

மின்னஞ்சல் மற்றும் வலையை பாதுகாப்பாகப் பயன்படுத்தச் சில உதவிக்குறிப்புகள்.

•    மின்னஞ்சல் இணைப்புகளைத் திறக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மின்னஞ்சல் இணைப்புகள் (மின்னஞ்சல் செய்திகளுடன் இணைக்கப்படும் கோப்புகள்) வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம். உங்களுக்குத் தெரியாத ஒரு நபரிடமிருந்து வந்த இணைப்பை ஒருபோதும் திறக்க வேண்டாம். அனுப்புநரை உங்களுக்குத் தெரியும், ஆனால் அவரிடமிருந்து இணைப்பை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால், அதைத் திறப்பதற்கு முன் அதை அவர்தான் அனுப்பினாரா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும். ஒரு மின்னஞ்சல் செய்தியை எப்போது நம்பலாம்?, மின்னஞ்சல் வைரஸ்களைத் தவிர்த்தல் ஆகியவற்றைப் பார்க்கவும்.
•    உங்கள் தனிநபர் தகவலை கவனமாகப் பாதுகாக்கவும். ஒரு வலைத்தளம் உங்கள் கடன் அட்டை எண், வங்கி விவரங்கள், அல்லது பிற தனிநபர் தகவல்களைக் கேட்டால், உங்களுக்கு அந்த வலைத்தளத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும், அதன் பரிமாற்ற அமைப்பு பாதுகாப்பானதுதானா என்று சரிபார்க்கவும். ஒரு வலைத்தளத்தை எப்போது நம்பலாம்? என்பதைப் பார்க்கவும்.
•    Internet Explorer -இல் உள்ள ஃபிஷிங் வடிகட்டியைப் பயன்படுத்தவும். ஃபிஷிங் என்பது மோசடி மின்னஞ்சல் செய்திகளை அல்லது வலைத்தளங்களை உருவாக்கி கணினிப் பயனர்களிடமிருந்து தனிநபர் தகவலை அல்லது நிதித் தகவலை தந்திரமாகப் பெறுதல். மோசடி மின்னஞ்சல் செய்தி அல்லது வலைத்தளம் ஒரு வங்கி, கடன் அட்டை நிறுவனம், அல்லது ஒரு பிரபல இணைய விற்பனையகம் என்பது போல நம்பகமான ஒரு மூலத்திலிருந்து வருவது போல் தெரியும். ஃபிஷிங் வடிகட்டி, ஃபிஷிங் வலைத்தளங்களைக் கண்டுபிடித்து உங்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கிறது. ஃபிஷிங் வடிகட்டி: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதைப் பார்க்கவும்.
•    மின்னஞ்சல் செய்திகளில் இருக்கும் மிகைஇணைப்புகளை கிளிக்செய்யும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மிகைஇணைப்புகள் (நீங்கள் கிளிக் செய்யும்போது வலைத்தளங்களைத் திறக்கும் இணைப்புகள்) பெருமளவில் ஃபிஷிங் மற்றும் வேவுபொருள் மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவை வைரஸ்களையும் பரப்பக்கூடும். நீங்கள் நம்பும் மின்னஞ்சல் செய்திகளில் இருக்கும் இணைப்புகளை மட்டுமே கிளிக் செய்யவும்.
•    நீங்கள் நம்பும் வலைத்தளங்களிலிருந்து மட்டுமே துணைநிரல்களைநிறுவவும். ActiveX கட்டுப்பாடுகள் உள்பட வலை உலாவித் துணைநிரல்கள் கருவிப் பட்டிகள், பங்கு நிலவரம் காட்டும் நிரல்கள், வீடியோ, அசைவூட்டம் போன்றவற்றை வலைப்பக்கங்கள் காண்பிக்க வழிசெய்கின்றன. இருந்தாலும், துணைநிரல்கள் வேவுபொருட்களையும் பிற தீங்குதரும் மென்பொருட்களையும் கூட நிறுவக்கூடும். ஒரு வலைத்தளம் ஒரு துணைநிரலை நிறுவும்படி கேட்டால், நீங்கள் அதை நிறுவுவதற்கு முன் அதன் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும். நீங்கள் ActiveX கட்டுப்பாடுகளை நிறுவ வேண்டுமா?, Internet Explorer துணைநிரல்கள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ஆகியவற்றைப் பார்க்கவும்.

Windows -ஐத் தானாகப் புதுப்பித்தல்

Windows -க்கு Microsoft தவறாமல் அவ்வப்போது முக்கியமான புதுப்பித்தல்களை(windows updats) வழங்குகிறது. இவை உங்கள் கணினியைப் புதிய வைரஸ்கள் மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்களிலிருந்து பாதுகாக்கும். இந்தப் புதுப்பித்தல்கள் உங்களுக்கு மிக விரைவாகக் கிடைக்க, தானியங்கு புதுப்பித்தலை இயக்கவும். பிறகு நீங்கள் உங்கள் கணினியில் முக்கியமான Windows பிழைநீக்கு நிரல்கள் இல்லையோ என்று கவலைப்படத் தேவையில்லை.
புதுப்பித்தல்கள் நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்போது பின்னணியில் பதிவிறக்கப்படும். புதுப்பித்தல்கள் காலை 3.00 மணிக்கு நிறுவப்படுகின்றன. நீங்கள் விரும்பினால் நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். அதற்கு முன் உங்கள் கணினியை அணைப்பதாக இருந்தால் நீங்கள் அணைப்பதற்கு முன் புதுப்பித்தல்களை நிறுவலாம். இல்லையெனில், Windows நீங்கள் அடுத்த முறை உங்கள் கணினியைத் தொடங்கும்போது அவற்றை நிறுவும்.

தானியங்கு புதுப்பித்தலை இயக்க:
1.     Windows புதுப்பித்தலை கிளிக் செய்து திறக்கவும்.
2.    அமைப்புகளை மாற்று என்பதை கிளிக் செய்யவும்.
3.    புதுப்பித்தல்களைத் தானாக நிறுவு (பரிந்துரைக்கப்பட்டது) என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
4.    பரிந்துரைக்கப்பட்ட புதுப்பித்தல்கள்(recamendad updates) என்பதற்குக் கீழ், புதுப்பித்தல்களைப் பதிவிறக்கும்போது, நிறுவும்போது, அல்லது அவை பற்றி எனக்குத் தெரிவிக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட புதுப்பித்தல்களையும் சேர் என்ற தேர்வுப் பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும், பிறகு சரி(ok) என்பதை கிளிக் செய்யவும்.   If you are prompted for an administrator password or confirmation, type the password or provide confirmation.
Windows தானியங்கு புதுப்பித்தலைப் புரிந்துகொள்ள என்பதையும் பார்க்கவும்.

நிலையான பயனர் கணக்கு ஒன்றைப் பயன்படுத்தவும்.
நீங்கள் உங்கள் கணினியில் உள்நுழையும்போது, Windows உங்கள் பயனர் கணக்கு என்ன வகையானது என்பதைப் பொருத்து உங்களுக்குக் குறிப்பிட்ட அளவு உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் வழங்குகிறது. பயனர் கணக்குகள் (user account)மூன்று வகையானவை: நிலையானவை(standard), நிர்வாகிக் கணக்குகள்(administrator), விருந்தினர்(guest) கணக்குகள்.

நிர்வாகிக் கணக்கில்(administrator account) கணினி முழுவதையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும், நிலையான கணக்கு ஒன்றைப் பயன்படுத்தினால் உங்கள் கணினி மேலும் பாதுகாப்பாக இருக்கும். நிலையான கணக்கைப் பயன்படுத்தினால், நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது மற்றவர்கள் (அல்லது ஹாக்கர்கள்) உங்கள் கணினியை அணுகினால் கூட அவர்களால் கணினியின் பாதுகாப்பு அமைப்புகளைக் குலைக்கவோ மற்ற பயனர் கணக்குகளை மாற்றவோ முடியாது.
உங்கள் கணக்கு எந்த வகை என்று கண்டுபிடிக்க
•     பயனர் கணக்குகள் என்பதை கிளிக் செய்து திறக்கவும்.
கணக்கு வகை உங்கள் பெயருக்குக் கீழ் தெரியும்.

படம் பயனர் கணக்கு விவரம் பற்றி கூறுகிறது.

நீங்கள் தற்போது ஒரு நிர்வாகிக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை நிலையான கணக்காக மாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ள ஒரு பயனரின் கணக்கு வகையை மாற்ற என்பதை கிளிக் செய்யவும்.
பயனர் கணக்குகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதையும் பார்க்கவும்.


கணினியை பாதுகாக்க பாதுகாப்புச் சுவரைப் பயன்படுத்தவும்.

பாதுகாப்புச் சுவர் என்பது இணையத்திலிருந்து அல்லது ஒரு பிணையத்திலிருந்து வரும் தகவலைச் சோதித்து நிராகரிக்கும் அல்லது உங்கள்  கணினிக்குச் செல்ல அனுமதிக்கும் ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள். இதன் செயல்பாடு உங்கள் பாதுகாப்புச் சுவர் அமைப்புகளைப் பொருத்து அமையும். இந்த முறையில் பாதுகாப்புச் சுவர் உங்கள் கணினியை ஹாக்கர்களும் தீங்குதரும் மென்பொருட்களும் அணுகாமல் தடுக்கிறது.
Windows பாதுகாப்புச் சுவர் Windows -க்குள் அமைக்கப்பட்டிருக்கிறது; இது தானாகவே இயக்கப்படுகிறது.

படத்தில் பாதுகாப்புச் சுவர் இயங்கும் விதம் காட்டப்பட்டுள்ளது.

இணையத்திலிருந்து அல்லது பிணையத்திலிருந்து தகவல் பெற வேண்டிய ஒரு நிரலை - உதாரணமாக, ஒரு துரிதச் செய்தி நிரல் அல்லது பல ஆட்டக்காரர்கள் ஆடும் பிணைய விளையாட்டு - திறக்கிறீர்கள் என்றால், அந்த இணைப்பைத் தடுக்க விரும்புகிறீர்களா அனுமதிக்க விரும்புகிறீர்களா என்று பாதுகாப்புச் சுவர் கேட்கும். நீங்கள் இணைப்பை அனுமதித்தால், Windows பாதுகாப்புச் சுவர் அதற்கு ஒரு விதிவிலக்கை உருவாக்கும். இதனால் அந்த நிரல் மீண்டும் தகவல் பெற வேண்டியிருக்கும்போது பாதுகாப்புச் சுவர் உங்களைத் தொந்தரவு செய்யாது.
பாதுகாப்புச் சுவர்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதையும் பார்க்கவும்.

வைரஸ் பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

வைரஸ்கள் (viruses), நச்சுப்பெருக்கிகள்(worms), டிரோஜன்(trojan) ஹார்ஸ்கள்(horses) ஆகியவை, பாதுகாப்பற்ற கணினிகளை இணையத்தைப் பயன்படுத்தித் தாக்குவதற்கு ஹாக்கர்கள் உருவாக்கும் நிரல்கள். வைரஸ்களும் நச்சுப்பெருக்கிகளும் தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டு கணினியிலிரு்து கணினிக்குப் பரவக்கூடியவை; டிரோஜன் ஹார்ஸ்கள், ஸ்கிரீன் சேவர் போல் ஒழுங்கானதாகத் தெரியும் ஒரு நிரலுக்குள் மறைந்துகொண்டு கணினிக்குள் நுழைகின்றன. சேதம் ஏற்படுத்தும் வைரஸ்கள், நச்சுப்பெருக்கிகள், டிரோஜன் ஹார்ஸ்கள் ஆகியவை உங்கள் நிலை வட்டில்(hard disk) உள்ள தகவலை அழிக்கக்கூடும் அல்லது உங்கள் கணினியை முழுவதுமாகச் செயலிழக்க வைத்துவிடக்கூடும். இன்னும் சில தீம்பொருட்கள் நேரடியாகச் சேதம் விளைவிக்காது, ஆனால் உங்கள் கணினியின் செயல்திறனையும் ஸ்திரத்தன்மையையும் கணிசமாகக் குறைத்துவிடும்.
வைரஸ் தடுப்பு நிரல்கள்(antivirus programs) உங்கள் கணினியில் இருக்கும் மின்னஞ்சலிலும் பிற கோப்புகளிலும் வைரஸ்கள், நச்சுப்பெருக்கிகள், டிரோஜன் ஹார்ஸ்கள் உள்ளனவா என்று ஸ்கேன் செய்கின்றன. வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வைரஸ் தடுப்பு நிரல் அது உங்கள் கணினியையும் கோப்புகளையும் சேதப்படுத்துவதற்கு முன் அதை விலக்கி வைக்கிறது (தனிமைப்படுத்தி வைக்கிறது) அல்லது முற்றிலுமாக நீக்குகிறது.
Windows -இல் வைரஸ் தடுப்பு நிரல் இல்லை(windows os will not come with antivirus software package), ஆனால் உங்கள் கணினி உற்பத்தியாளர் அதை நிறுவியிருக்கக்கூடும். உங்கள் கணினியில் வைரஸ் தடுப்பு நிரல் பாதுகாப்பு இருக்கிறதா என்று கண்டறிய பாதுகாப்பு மையத்தைப் பார்க்கவும். அது இல்லை என்றால், Microsoft வைரஸ் தடுப்புக் கூட்டாளர்கள் (www.microsoft.com)  என்ற வலைப்பக்கத்திற்குச் சென்று ஒரு வைரஸ் தடுப்பு நிரலைக் கண்டுபிடிக்கவும்.
ஒவ்வொரு நாளும் புதிய வைரஸ்கள் அடையாளம் காணப்படுவதால், தானாகப் புதுப்பித்துக்கொள்ளும் திறனுள்ள வைரஸ் தடுப்பு நிரல்(antivirus software) ஒன்றைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். வைரஸ் தடுப்பு மென்பொருள் புதுப்பிக்கப்படும்போது அது தான் சோதிக்க வேண்டிய வைரஸ்களின் பட்டியலில் புதிய வைரஸ்களைச் சேர்க்கிறது. இது உங்கள் கணினி மீது புதிய தாக்குதல்கள் தொடுக்கப்படாமல் தடுக்கிறது. வைரஸ் பட்டியல் பழையதாகிவிட்டால் உங்கள் கணினி புதிய அபாயங்களுக்கு இலக்காகக்கூடும். வழக்கமாகப் புதுப்பித்தல்களுக்கு வருடாந்தர சந்தா கட்டணம் ஒன்று செலுத்த வேண்டியிருக்கும். தவறாமல் புதுப்பித்தல்களைப் பெற சந்தாவைத் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.

எச்சரிக்கை:   நீங்கள் வைரஸ் தடுப்பு மென்பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்றால், உங்கள் கணினியைத் தீங்குதரும் மென்பொருட்கள் சேதப்படுத்தலாம். உங்கள் கணினி மூலம் மற்ற கணினிகளுக்கு வைரஸ்கள் பரவும் ஆபத்தும் இருக்கிறது.
வைரஸ்கள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதையும் பார்க்கவும்.

வேவுபொருள் பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

வேவுபொருள்(spyware) என்பது ஒரு வகைத் தீம்பொருள். இது பொதுவாக உங்களிடம் முறையாக அனுமதி பெறாமலே விளம்பரங்களைக் காண்பிக்கக்கூடும், உங்களைப் பற்றித் தகவல் சேகரிக்கக்கூடும், அல்லது உங்கள் கணினியில் அமைப்புகளை மாற்றக்கூடும். உதாரணமாக, வேவுபொருட்கள்(spyware) உங்கள் வலை உலாவியில் தேவையற்ற கருவிப்பட்டிகள், இணைப்புகள், அல்லது பிடித்தவையை நிறுவலாம், உங்கள் இயல்புநிலை முகப்புப் பக்கத்தை மாற்றலாம், அல்லது அடிக்கடி விழிதிரை விளம்பரங்களைக் காண்பிக்கலாம். சில வேவுபொருட்கள் நீங்கள் கண்டுபிடிக்கும் வகையில் எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது; ஆனால் நீங்கள் பார்க்கும் வலைத்தளங்கள் அல்லது நீங்கள் தட்டச்சு செய்யும் உரை போன்ற முக்கியமான தகவல்களை அவை ரகசியமாகச் சேகரிக்கும். பெரும்பாலான வேவுபொருட்கள் நீங்கள் பதிவிறக்கும் இலவச (free downladed software) மூலம் நிறுவப்படுகின்றன, ஆனால் சில சமயங்களில் ஒரு வலைத்தளத்திற்குச் சென்றாலே வேவுபொருட்கள் நிறுவப்பட்டுவிடுகின்றன.

உங்கள் கணினியை வேவுபொருட்கள் தாக்காமல் இருக்க, வேவுபொருள் தடுப்பு நிரல் (anti spyware) ஒன்றைப் பயன்படுத்தவும். Windows -இன் vista பதிப்பில்  Windows Defender என்ற வேவுபொருள் தடுப்பு நிரல் ஒன்று உள்ளது. இது இயல்புநிலையாக  இயக்கப்படுகிறது. உங்கள் கணினியில் வேவுபொருட்கள் நிறுவிக்கொள்ள முயற்சிக்கும்போது Windows Defender உங்களை எச்சரிக்கிறது. அது உங்கள் கணினியில் வேவுபொருட்கள் உள்ளனவா என்று பார்த்து அகற்றவும் செய்யும்.
ஒவ்வொரு நாளும் புதிய வேவுபொருட்கள் தோன்றுவதால், மிகச் சமீபத்திய வேவுபொருள் அபாயங்களைக் கண்டுபிடிக்கவும் பாதுகாத்துக்கொள்ளவும் Windows Defender தவறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும். நீங்கள் Windows -ஐப் புதுப்பிக்கும்போதெல்லாம் தேவையெனில் Windows Defender -உம் புதுப்பிக்கப்படும். மிக உயர்ந்த அளவு பாதுகாப்பைப் பெற, Windows -ஐத் தானாகப் புதுப்பித்தல்களை நிறுவும்படி அமைக்கவும் (கீழே பார்க்கவும்).
வேவுபொருள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், Windows Defender -ஐப் பயன்படுத்துதல் ஆகியவற்றையும் பார்க்கவும்.


கணினியில் உள்ள நிழற்படங்களை கையாலுதல்


கணினியில் நிழற்படங்களை கையாளுதல் மிகஎளிது. நாம் நம் கணினியில் உள்ள நிழற்பட தொகுப்புகளை கண்கானிக்கும் நிரலை தெளிவாக சிக்கள்கல் இல்லாமல் பயன்படுத்தும்போது நமது தரவுகள் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நாம் நினைக்கும் வண்னம் கணினியில் செயல்படும்.
  • ஒரு படத்தைச் சுழற்ற -  rotate a picture

நிழற்படத் தொகுப்பில் செங்குத்தான படங்கள் பக்கவாட்டாகத் திரும்பியது போல் தெரியலாம். இந்தப் படங்களை சரியான திசையில் வைக்க இடஞ்சுழியாகச் சுற்று (rotate left) என்ற பொத்தானை  அல்லது வலஞ்சுழியாகச் சுற்று (rotate right) பொத்தானை  கிளிக் செய்யவும்.
மேல் உள்ள படத்தில் நிழற்படம் சுழற்றப்பட்டுள்ளது,சிறுஉருவம் சுழற்றுவதற்கு முன்பும் (இடது) சுழற்றியதற்குப் பின்பும் (வலது)

  • ஒரு படத்தை முழு அளவில் பார்க்க - view a picture at a full size

நிழற்படத் தொகுப்பு சாளரத்தைப் (picture gallery window) நிரப்பும் அளவிற்கு (full size) ஒரு படத்தைப் பார்க்க, படத்தை இரு-கிளிக் செய்யவும். சாளரத்தின் வலப்பக்கத்தில் உள்ள தகவல் பலகம், படத்தைப் பற்றிய தகவல்களைக் காண்பிக்கும். இது படத்திற்குக் குறிக்குழுக்களைச் சேர்க்கவும் உதவும் (கீழே "படங்களுக்குக் குறிக்குழுக்களைச் சேர்க்க" என்பதைப் பார்க்கவும்).

படத்தை முடிந்த அளவு பெரிதாகப் பார்க்க, நிழற்படத் தொகுப்பின் சாளரத்தைப் பெரிதாக்கவும். தகவல் பலகத்தை மூடுவதற்கு அதன் மேற்பக்க மூலையில் உள்ள மூடு பொத்தானை கிளிக் செய்யவும்.

படத்தில் ஒரு பகுதியை மட்டும் பெரிதாக்கிப் பார்க்க, பெரிதாக்கு பொத்தானை கிளிக் செய்து நகர்வுகோலை மேலே நகர்த்தவும். பெரிதாக்கியதும், கைவடிவக் குறிப்பானை  படத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் இழுத்து படத்தை நகர்த்திப் பார்க்கலாம். சாதாரணக் காட்சிக்குத் திரும்ப, சாளரத்திற்குப் பொருத்து (fit to window) என்ற பொத்தானை  கிளிக் செய்யவும்.
முழு அளவுப் படம் (இடது); பெரிதாக்கப்பட்ட படம் (வலது)

சிறுஉருவங்கள் காட்சிக்குத் திரும்ப, படத்தொகுப்புக்குத் திரும்பு (back to gallery) என்பதை கிளிக் செய்யவும்.

  • உங்கள் படங்களின் ஸ்லைடு காட்சியைப் பார்க்க -  see a slide show of your picture

உங்கள் டிஜிட்டல் படங்களை, தானாக இயங்கும் ஒரு முழுத் திரை ஸ்லைடு காட்சியாகப் பார்க்கலாம். அசைவூட்டமும் பிற காட்சி விளைவுகளும் (animation and other visual effects) அடங்கிய பல விதமான ஸ்லைடு காட்சி கருப்பொருள்களிலிருந்தும் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் சில கருப்பொருள்கள் (themes) ஒரே சமயத்தில் பல படங்களைத் திரையில் காண்பிக்கும்; உதாரணம் கீழே.
ஒரு ஸ்லைடு காட்சியைத் தொடங்க, நீங்கள் விரும்பும் படங்களைத் தேர்ந்தெடுக்கவும், பிறகு நிழற்படத் தொகுப்பின் அடிப்பக்கம் உள்ள ஸ்லைடு காட்சி பொத்தானை (slide show button) கிளிக் செய்யவும். நீங்கள் எந்தப் படத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், தற்போது தெரியும் எல்லாக் காட்சிகளையும் ஸ்லைடு காட்சி எடுத்துக்கொள்ளும்.
ஒரு ஸ்லைடு காட்சி நடந்துகொண்டிருக்கும்போது நீங்கள் அதை இடைநிறுத்தலாம், அதன் வேகத்தை மாற்றலாம், முன்னே அல்லது பின்னே செல்லலாம், படங்கள் தற்போக்கில் (random rang) காண்பிக்கப்பட வேண்டுமா தொடர்வரிசையில் (sequence range) காண்பிக்கப்பட வேண்டுமா என்றும் தேர்வு செய்யலாம். ஸ்லைடு காட்சி கட்டுப்பாடுகளைப் பார்க்க, சுட்டியைத் திரையின் அடிப்பகுதிக்குக் கொண்டுசெல்லவும். கட்டுப்பாடுகள் தெரியவில்லை என்றால், ஸ்லைடு காட்சி மீது வலது கிளிக் செய்யவும். இது ஒரு மெனுவைக் காட்டும்

ஒரு ஸ்லைடு காட்சியை முடிக்க, ESC விசையை அழுத்தவும் அல்லது ஸ்லைடு காட்சி கட்டுப்பாடுகளில் வெளியேறு என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்புகள்
•    ஸ்லைடு காட்சிக்கான கருப்பொருள்களைப் (themes) பார்க்க, Windows அனுபவ அடைவின் (windows experience index) வரைவியல் வகையில் (graphics category) குறைந்தது 3.0 வகை (version) ஆவது உங்கள் கணினியில் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு, Windows அனுபவ அடைவு என்பது என்ன? என்பதைப் பார்க்கவும்
•    குறிப்பிட்ட சில கருப்பொருள்கள் Windows Vista Home Premium, Windows Vista Ultimate ஆகிய பதிப்புகளில் மட்டுமே உள்ளன.

படங்களை அச்சிடுதல் - Printing picture.

இந்தப் பகுதி, முக்கியமான மூன்று அச்சிடும் முறைகளை விளக்குகிறது. அச்சிடுதல் குறித்துப் பொதுவான தகவல்களை அறிய, அச்சிடுதலுக்கு அறிமுகம் என்பதைப் பார்க்கவும்.

  • வீட்டிலுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்துதல் - using a home printer

உங்கள் வீட்டில் அச்சுப்பொறி இருந்தால், உங்கள் புகைப்படங்களை நீங்களே அச்சிடலாம். இங்க்ஜெட் அச்சுப்பொறிகள், மை வெப்பமாற்ற அச்சுப்பொறிகள் ஆகிய இரண்டுமே உயர்தர வண்ணப் புகைப்படங்களை அச்சிடக்கூடியவை. இதற்குச் சிறப்புத் தாள் வகை ஒன்று தேவை. பல அச்சுப்பொறிகளில் நினைவக அட்டை படிப்பிகளும் சிறிய LCD திரைகளும் இருக்கும். எனவே நீங்கள் உங்கள் கணினியைப் பயன்படுத்தாமலே படங்களை அச்சிடலாம்.

உங்கள் கணினியிலிருந்து படங்களைப் பல விதங்களில் அச்சிடலாம். நீங்கள் ஒரு படத்தை அச்சிடலாம், ஒரே பக்கத்தில் பல படங்களை அச்சிடலாம், அல்லது தொடர்புத் தாள் (எளிதாகப் பார்த்து அறிய உதவும் சிறுஉருவப் பட அடுக்கு) ஒன்றை அச்சிடலாம்.
Windows நிழற்படத் தொகுப்பைப் பயன்படுத்திப் படங்களை அச்சிட, நீங்கள் அச்சிட விரும்பும் படங்களைத் தேர்ந்தெடுக்கவும். கருவிப்பட்டியில் அச்சிடு என்பதை கிளிக் செய்யவும், பிறகு அச்சிடு என்பதை கிளிக் செய்யவும். படங்களை அச்சிடு உரையாடல் பெட்டியில், அச்சிடும் விருப்பங்களைத் தேர்வு செய்து, அச்சிடு என்பதை கிளிக் செய்யவும். கூடுதல் தகவலுக்கு, படங்களை அச்சிடுதல்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதைப் பார்க்கவும்.

படங்களை அச்சிடு உரையாடல் பெட்டியின் சாளரம்

  • அச்சுகளை ஆன்லைனில் வாங்குதல் - ordering print online

வீட்டிலுள்ள அச்சுப்பொறிகள் பயன்படுத்த வசதியானவை, துரிதமாக அச்சிட உதவுபவை. ஆனால் மையும் தாளும் வாங்குவதற்குச் செலவாகும் பணத்தையும் வேலையையும் மிச்சப்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், ஒரு ஆன்லைன் புகைப்பட அச்சிடல் சேவையைப் பயன்படுத்துவது குறித்துச் சிந்திக்கவும். இந்தச் சேவைகள் நீங்கள் உங்கள் படங்களை ஒரு வலைத்தளத்திற்குப் பதிவேற்றும் (நகலெடுக்கும்) சேவையை வழங்குகின்றன. அங்கிருந்து நீங்கள் பல்வேறு அளவுகளில் அச்சுகளுக்கு ஆர்டர் செய்து அவற்றுக்குக் கடன் அட்டை மூலம் பணம் செலுத்தலாம். பிறகு அச்சுகள் உங்கள் வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ அஞ்சல் செய்யப்படும்.

ஆன்லைன் புகைப்பட அச்சிடல் சேவைகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஒரு நன்மை என்னவென்றால், அவை பல வகையான தயாரிப்புகளை வழங்குகின்றன. வழக்கமான அச்சுகள் தவிர, உங்கள் விருப்பப்படி வடிவமைக்கப்பட்ட டி-ஷர்ட்கள், வாழ்த்து அட்டைகள், நாள்காட்டிகள், கோப்பைகள், சுவரொட்டிகள், சுட்டி அட்டைகள், மற்றும் பல தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம். இவை எல்லாவற்றிலும் நீங்கள் தேர்வு செய்த படங்கள் இருக்கும். அதோடு, வழக்கமாக இந்தத் தளங்கள் படப் பகிர்வுச் சேவைகளையும் வழங்குகின்றன (மேலே "படங்களைப் பகிர்தல்" என்பதைப் பார்க்கவும்).
Windows நிழற்படத் தொகுப்பு அல்லது படங்கள் கோப்புறையிலிருந்தும் நேரடியாக அச்சுகளை ஆர்டர் செய்யலாம். கூடுதல் தகவலுக்கு, உங்கள் படங்களின் அச்சுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய என்பதைப் பார்க்கவும்.

  • ஒரு சிறு விற்பனையாளரிடமிருந்து அச்சுகளை வாங்குதல்-getting prints form a retailer

உங்களுக்கு விரைவாக அச்சுகள் வேண்டும், ஆனால் உங்களிடம் அச்சுப்பொறி இல்லை என்றால் டிஜிட்டல் புகைப்பட அச்சிடல் சேவைகளை வழங்கும் ஒரு கடைக்கு உங்கள் கேமராவின் நினைவக அட்டையை எடுத்துச் செல்லவும். கேமரா கடைகள், பெரிய சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவை மட்டுமின்றி சில மளிகைக் கடைகளும் மருந்தகங்களும் கூட இந்தச் சேவைகளை அளிக்கின்றன. சில கடைகளில் உள்ள சுயசேவை புகைப்பட நிலையங்கள், நீங்கள் உங்கள் படங்களைச் சில நிமிடங்களில் திருத்தவும், நுனிவெட்டவும், அச்சிடவும் உதவுகின்றன.

உங்கள் படங்களை மறுபிரதி எடுத்தல் - backing up your pictures.

நீங்கள் டிஜிட்டல் கேமரா பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களிடம் மிகச் சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் படங்கள் சேர்ந்துவிடலாம். இந்தப் படங்களில் விலைமதிப்பற்ற நினைவுகள் இருக்கின்றன; உங்கள் கணினியின் நிலை வட்டு செயலிழந்துபோனால் அவை திரும்பக் கீடைக்காது. ஆகவே, உங்கள் படங்களின் நகல்களை வேறு எங்காவது சேமித்துவைப்பது முக்கியம். நீங்கள் அவற்றைப் பதிவுசெய்யத்தக்க DVDகளில் அல்லது CDகளில், அல்லது ஒரு வெளிப்புற நிலை வட்டில் நகலெடுத்து வைக்கலாம், அல்லது இணையத்தில் உள்ள கோப்பு சேமிப்பக சேவை ஒன்றைப் பயன்படுத்தலாம்.